Samstag, 15. Oktober 2022

 நாட்டு நடப்பு -

நானும் புலம்பெயர்ந்த நாள் முதல் சுற்றும் முற்றும் நடப்பது பற்றி புலம்பிக்கொண்டே இருக்கிறன்


நீங்கள் என்ன சொல்லபோறீங்கள் எண்டு எனக்கு தெரியும் பாருங்க! இவ  என்னமோ வெட்டி முறிக்கிறாபோலே

வெட்டியா எழுதி தள்ளுறா என்று முணுமுணப்போர் சிலர் உண்டு,  எழுதுறது என்றால் சும்மாவா? கையாலே பேனை பிடித்து எழுதாட்டியும், கீபோட்டிலை தட்டி தட்டி  எழுதினாலும் விரலும் நோவும், சிந்திச்சு சிந்திச்சு மூளையும் களைத்து போகும்  என்னமோ எழுதினால் மனசு கொஞ்சம் பிரியாகுதுங்க! அவ்வளவேதான்.

மகா பாரதத்திலை பாண்டவருக்கு ஒரு வருடம்தான் ஐஞ்ஞாத வாஸசம் நமக்கு ஐஞ்ஞாத வாஸ்சம் தொடர்ந்து கொண்டே போகுது வாழும் வரை துன்பங்களுக்கு முடிவு இல்லை என்றாலும் உலக வாழ்க்கைக்கு ஒரு முடிவு வந்துடுமுங்க, காரணம் என்னதான் நாம் கொரோனாவுக்கும் யுத்ததுக்கும் பயந்து ஒழிந்து வாழ்ந்தாலும் ஒருநாள் இன்றோ இல்லை நாளையோ காலனின் கைக்கும் கண்ணுக்கும் நாம் எட்டி விடுவோமே! ஏனெனில் காலனுக்கு கையும் நீளம் கண் பார்வையும் நல்ல கெட்டியுங்க!

இப்ப நாலாவது ஊசியும் போட வர சொல்லிடாங்க உயிர் தப்பி வாழ ஆசைபடாவிடிலும் நோயின் கொடுமையை அனுபிக்க பயந்துதான் ஊசியெல்லாம் போட வேணடியிருக்கு எனி கொரோனா எந்த பேரிலை குட்டி போட போகுதோ அதுவும் தெரியாது.

இப்ப கொஞ்ச நாளா இணையத்தில் சாஸ்திரிகள் துலாம் ராசிக்கு  சனி குரு அதிசார பெயர்ச்சி அதிஸ்டம் உச்சத்திலை என்று புழுகி தள்ளுறாங்க அதிஸ்டம் பற்றி தெரியலை கொரோனோ உச்த்துக்கு போட்டுது இப்ப யுத்தமும் உச்சத்திலே இதுதாங்க உண்மை!

அங்கை ஒருத்தர்  யாரை பற்றி கதைச்சாலும் அவர் என்ன நம்பர் எண்டு கேட்டு போட்டு உதுகள் உருபடாதுகள் அவைக்கு நம்பர் சரியில்லை என்று சொல்லி போடுவார் ஆனால் 7 நம்பர் மட்டும் லக்கி 7 என்று புழுகி தள்ளுவார் காரணம் அவரது பிள்ளை 7 என்பதால் எத்தனை 7 நம்பர் ஆழுகி புழுத்து சாவுறாங்க?

ஒரு ஆம்பிளை 7 நம்பர் 7 தடவை கட்டியும் கடைசியிலே வீடுழந்து பிள்ளை குட்டிகளை இழந்து அனாதையாகதான் செத்தாரு இன்னும்  ஒருத்தர் அப்படிதான் கடைசியிலை கிடந்து அழுந்துறாரு

7 இலை பிறந்த பெண் ஒருத்தி அடி சூடுவாங்கிக்கொண்டு கைகட்டி வாய் பொத்தி புருஸனுக்கு அடிமையா கிடக்குது, புருஸன்காரன் வீட்டிலை நிண்டா அவவுக்கு யாரோடும் ரெலிபோனில் பேச கூட விடமாட்டான் என்றால் பாருங்களேன்  இன்னுமொரு பிள்ளை 3 வாட்டி கட்டியும் வாளாவெட்டியாகிதான் நிக்குது இதிலை 7தான் நல்ல லக்கி நம்பர் என்று சொல்லுகிறவர்களை என்ன சொல்ல?

நம்பரிலை என்ன இருக்கு? எல்லாம் அவனவன் கர்ம வினைக்கு ஏற்றா போலேதான் வாழ்க்கை அமையுது

முன்னை செய்ததை சாக முன்னரும் அது தப்பினால் அடுத்த பிறப்பிலும் தண்டனைகள் தொடரும் இதுதானே இந்து மதம் சொல்கிறது குறிப்பா கருட புராணம் சொல்லுதுங்க!

இன்னும் விஸயங்கள் இருந்தால் அடுத்த முறை சொல்லுறேனுங்க

Keine Kommentare:

Kommentar veröffentlichen