Samstag, 15. Oktober 2022

 

எந்தன் வீட்டு தோட்டதிலே

பட்டு இதழ் ரோசா

மொட்டு அவிழ்ந்து சிரிக்குது

பார்த்து மகிழ கண்களுக்கு

மோகனாய் இருக்குது

கட்டவிழ்ந்து மனசு

களிநடனம் புரியுது

சுத்தி சுத்தி வண்டு வந்து

எட்டி எட்டி பார்குது

 


வட்ட நிலா வானில் வந்து

ரசித்து விட்டு போகுது

விட்டு விட்டு தென்றலும்

வந்து வீசி வாசம் அள்ளி போகுது

தூரலோடு சாரல் வந்து

மெல்ல சிலிர்த்து நிக்குது

இயற்கையோடு மனசும்

 கலந்தே பேசுது

இத்தனையும் எந்தன் வீட்டு

தோட்டதிலே நித்தமும் நடக்குது

கவி மீனா


Keine Kommentare:

Kommentar veröffentlichen