தலைகால் புரியாமல்
புலம் பெயர் வாழ்வில்
சுதந்திரம் என்ற பெயரில்
சிதைந்தது தமிழர் வாழ்வு
அழிந்தது இன்ப தமிழின் மூச்சு
சுததந்திரம் கூடியதாலே
தறுதலையாக சுற்றுதுகள் சில இளவட்டம்
தலைகால் புரியாமல் பேசுதுகள்
நம் இனிய தமிழ் மொழியை
தமிழனுக்கில்லை இங்கே நின்மதி
அவன் வாரிசுகளுக்கு இல்லை கலாச்சாரம்
புகைக்காத கையும் இல்லை
குடிக்காத வாயும் இல்லை
பருவம் வந்தால் ஜோடியின்றி போகாத
இளசுகள் இல்லை
ஆடை மாற்றி எறிவது போல்
இது ஆளை மாற்றும் உலகம்
நாகரீகம் என்று சொல்லி
அரை குறை நாகரீகத்தில்
அலங்கோலமாய் அலைவது
சிலருக்கு தினம் வாடிக்கை
அதை பார்த்து பேசுவதே
பலருக்கு நல்ல வேடிக்கை
குண்டுமணி தங்கமின்றி ஊரில்
குமரிகள் கண்ணீரில் வாட்டம்
இங்கு ஆண்கள் கழுத்திலும் கையிலுமே
குண்டு குண்டா தொங்குது தங்கம்
தமிழர் இங்கு இரவு பகல் தெரியாமல்
காசை தேடி ஓட்டம்
இளசுகளோ சற் என்றும் பேஸ்புக் என்றும்
டீஸ்கோ என்றும் ஜோடியை தேடி ஆட்டம்
இங்கே காசு பணம் கூடி கலாசாரம் ஓடி
போனதுதானே புலம் பெயர் வாழ்வில்
கலப்பட திருமணமும் கலந்தது காதலில்
பல வித பாசையும் குழைந்தது மோதலில்
கற்பா மானமா இதற்க்கு வி
ளக்கம்தான் யாரம்மா?
இந்த உண்மைகளை பேசினால் குற்றவாளி நான் அம்மா
குற்றவாளி நான் அம்மா
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen