Sonntag, 18. Januar 2015


தலைகால் புரியாமல்

புலம் பெயர் வாழ்வில்

சுதந்திரம் என்ற பெயரில்

சிதைந்தது தமிழர் வாழ்வு

அழிந்தது இன்ப தமிழின் மூச்சு

சுததந்திரம் கூடியதாலே

தறுதலையாக சுற்றுதுகள் சில இளவட்டம்

தலைகால் புரியாமல் பேசுதுகள்

நம் இனிய தமிழ் மொழியை

தமிழனுக்கில்லை இங்கே நின்மதி

அவன் வாரிசுகளுக்கு இல்லை கலாச்சாரம்

புகைக்காத கையும் இல்லை

குடிக்காத வாயும் இல்லை

பருவம் வந்தால் ஜோடியின்றி போகாத

இளசுகள் இல்லை

ஆடை மாற்றி எறிவது போல்

இது ஆளை மாற்றும் உலகம்

நாகரீகம் என்று சொல்லி

அரை குறை நாகரீகத்தில்

அலங்கோலமாய் அலைவது

சிலருக்கு தினம் வாடிக்கை

அதை பார்த்து பேசுவதே

பலருக்கு நல்ல வேடிக்கை

குண்டுமணி தங்கமின்றி ஊரில்

குமரிகள் கண்ணீரில் வாட்டம்

இங்கு ஆண்கள் கழுத்திலும் கையிலுமே

குண்டு குண்டா தொங்குது தங்கம்

தமிழர் இங்கு இரவு பகல் தெரியாமல்

காசை தேடி ஓட்டம்

இளசுகளோ சற் என்றும் பேஸ்புக் என்றும்

டீஸ்கோ என்றும் ஜோடியை தேடி ஆட்டம்

இங்கே காசு பணம் கூடி கலாசாரம் ஓடி

போனதுதானே புலம் பெயர் வாழ்வில்

கலப்பட திருமணமும் கலந்தது காதலில்

பல வித பாசையும் குழைந்தது மோதலில்

கற்பா மானமா இதற்க்கு வி ளக்கம்தான் யாரம்மா?

இந்த உண்மைகளை பேசினால் குற்றவாளி நான் அம்மா

குற்றவாளி நான் அம்மா

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen