Samstag, 3. Januar 2015


தென்றலை தேடி
 

மலரை பற்றி கவி எழுத

இங்கு மலர்கள் கூட மலரவில்லை

நிலவை பற்றி கவி பாட

நிலவும் எட்டி பார்க்வில்லை

தென்றலை தேடி அலைந்தேன்

தென்றல் கூட வீசவில்லை

காதல் பாட்டை பாடி நின்றேன்

காதலனை காணவில்லை

அருவி அழகை பாட நினைத்தேன்

அருவி கூட அருகில் இல்லை

கொட்டும் பனியை தேடி நின்றேன்

வெண்பனியும் விழவில்லை

யாரை பார்த்து நான் கவி எழுத

யாரும் என்னருகில் இல்லை

இல்லாத ஒன்றை நினைத்து

இரவு பகலாய் கவி எழுத

என்னிடம் வார்தைகளும் இல்லை

வார்தைகளும் இல்லை

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen