Freitag, 16. Januar 2015


சிரிக்க வைத்து

 
எந்த குழந்தையும் பிறக்கும்

 போது சிரிப்பதில்லை

மனித வாழ்வின் துன்பத்தை

அது அறிந்தே அழுது கொண்டே பிறக்கிறது

அழுதுகொண்டே பிறந்த மனிதனுக்கு

இறக்கும் வரை அழுகை ஓய்வதில்லை

உலகில் எங்கோ ஒருவன் சிரிக்கின்றான்

அவன் வாழும் போதும் சிரிக்கின்றான்

ஒரு சிலரே அடுத்தவரை சிரிக்க வைத்து

தானும் மகிழ்கின்றான்

மனிதர் படும் துயரை கண்டு

ஆண்டவன் எங்கோ இருந்து சிரிக்கின்றான்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen