Samstag, 3. Januar 2015


திரை

பனி திரை விலக்கி பகலவன் வந்து ஒளி வீசும் போதும்

நித்திரை விலகா  பல மனிதர்கள் வாழும் உலகம் இது

சித்திரை மாத்தில் சிறுவன் பிறந்தால் அக்குடி நாசம் என்பர்

பத்தரை மாற்று தங்கம் போலே மானிடரை காண்பதும் அரிது

முகத்திரை விலக்கி வெண்ணிலா வானில் எட்டி பார்க்கும் வேளை

 கணணித்திரை முன் அமர்ந்தாலே கண்கள் அகல்வதும் இல்லை

முத்திரை இல்லா கடிதம் இன்று  .மெயில் கடிதமானது

வெள்ளித்திரையில் மட்டும் காதல் கதைகள் கவிநயம் ஊட்டும்

மோக திரை மூடில் மனம் மையலில் ஆடும்

நரை திரை வரும் முன்னே  நம் கடமைகளை செய்து

திரை விலக ஆலயத்தில் அம்பிகை தரிசனம் தருவாள்

மாயைதரை  திரை விலக  அவள் பாதம் பணியவே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen