Montag, 13. Januar 2014


நெஞ்சாங் கூட்டில்
 

தண்ணிக்குள்ளே விழுந்த கல்லு

தண்ணிக்கு அடியில் தாண்டு கிடப்பது போல்

நெஞ்சுக்குள்ளே விழுந்த நீயும்

என் நெஞ்சாங் கூட்டில் நின்று விட்டாய்

மண்ணை கிழித்து வரும் முளை

பெரும் மரமாகி நிற்பது போல்

என் சிந்தனையை சிதறடிச்சு நீ

என் சித்தம் எல்லாம் கவியானாய்

மாம்பழத்துக்குள் ஓர் வண்டு

உள்ளிருந்து துளைப்பது போல்

நீ என் இதயத்தின் உள்ளிருந்து

நித்தம் உனை நினைக்க வைத்தாய்

நினைக்க வைத்தாய்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen