நெஞ்சாங் கூட்டில்
தண்ணிக்குள்ளே விழுந்த கல்லு
தண்ணிக்கு அடியில் தாண்டு கிடப்பது போல்
நெஞ்சுக்குள்ளே விழுந்த நீயும்
என் நெஞ்சாங் கூட்டில் நின்று விட்டாய்
மண்ணை கிழித்து வரும் முளை
பெரும் மரமாகி நிற்பது போல்
என் சிந்தனையை சிதறடிச்சு நீ
என் சித்தம் எல்லாம் கவியானாய்
மாம்பழத்துக்குள் ஓர் வண்டு
உள்ளிருந்து துளைப்பது போல்
நீ என் இதயத்தின் உள்ளிருந்து
நித்தம் உனை நினைக்க வைத்தாய்
நினைக்க வைத்தாய்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen