Sonntag, 22. Dezember 2013


சுடலை ஞானம்
 

பூத்த மலர்கள் வாடிய போதும்

புதிதாய் ஒரு மொட்டு மீண்டும் மலரும்

வானை இருள் மூடிய போதும்

ஒரு நாள் முழுநிலா வானில் தெரியும்

வசந்த காலம் மறைந்த போதும்

மீண்டும் ஒரு வசந்தம் வரதானே வேணும்

இயற்க்கை என்றால் இடியும் இருக்கும்

மழையும் அடிக்கும்

வாழ்க்கை என்றால் துன்பமும்

இன்பமும் கலந்தே இருக்கும்

ஓடும் நதியில் அழுக்கும் சேரும்

மலையோரம் மூலிகை வழமும் கலந்தே ஓடும்

நீண்டு போன நெடும் சாலை முடியும்

அது குறுக்கு பாதையில் நெளிந்தே ஓடும்

வெட்டிய மரமும் மொட்டையாய் நிக்கும்

சில நாள் கழித்து புதிதாய் தளிர்க்கும்

சாவை நோக்கி நீ நடக்கின்ற போதும்

சுடலை ஞானம் உனக்கு கிடைக்கும்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen