பிரம்மன் தீட்டிய அழகோவியமே
சொட்டும் மழை
துளியில்
கொட்ட
நனைந்து
நிற்கும்
வட்ட கரு விழியாள்
என்னை
கட்டி
இழுத்து
விட்டாள்
அவள் கண்களின் காந்த
கணையினாலே
வெள்ளம் அலைந்தோட
அவளோ
மெல்ல
நடை
போட
நான் அவள் சிற்றிடையை
கண்களினால்
எடை
போட
உள்ளம் துள்ளி குதி
போடவே
மழை கொட்டையிலே மரதில்
தொங்கும்
மாங்கனிகள்
போலே
அவள் சிற்றிடை மேலே
காணும்
அழகில்
மனம்
கவி
பாடவே
கருமுகில்கள் கொட்டும்
மழை
போலே
அவளின்
நெளிந்தோடும்
கார்குழலில் வழிந்தோடும்
நீர்
திவலையின்
எழிலில்
மயங்கியே
நான் மது உண்ட
வண்டானேன்
அவள் பேரழகின் பெட்டகமே பிரம்மன் தீட்டிய
அழகோவியமே
இப் பேரெழிலை கண்டு
காதல்வயம்
கொண்டு பித்தனானேன்
வேல்
Keine Kommentare:
Kommentar veröffentlichen