மை எழுத்தில்
மை இல்லை என்றால்
என்
பேனாவால்
எழுத முடியாது
மை எழுத்து இல்லை
என்றால்
நம் தமிழில் அதிகம்
பேச
முடியாது
கருமையான கார்
மேகம்
கண்டு
கான மயிலும் குதித்தாடும்
அருமையான காதல்
கண்டே
இளமை என்றும் சதிராடும்
புதுமை செய்யும் பெண்கள்
வாழ்க்கை
புரட்ச்சியாக மாறி
விடும்
முதுமை வந்த மனிதருக்கே
பழமை கலாச்சாரம் தங்கி
விடும்
ஆமை புகுந்த வீடும்
பொறாமை
புகுந்த
மனசும்
என்றும் உருப்படாமலே
போய்விடும்
எளிமை கொண்ட மனிதர்
என்றும்
இம்மை
மறுமை
வந்த போதும் கலங்காதே
வாழ்ந்திடுவர்
சுமை தாங்கியாக நீ
பொறுமையோடு
வாழ்ந்தாலும்
தனிமை வந்து உன்
வாழ்வில்
இனிமை
இன்றி
செய்துவிடும்
வறுமை வந்த போதும்
நீ
உன்
கடமை
செய்து
வந்தால்
நேர்மையான பெண்
என்று
உனக்கு
பேரும்
புகழும்
சேர்ந்து
விடும்
ஆண்மை இல்லா ஆண்மகன்
பெண்மை
தன்னை
குறை கூறி வாழ்வதாலே
பசுமையான குடும்ப
வாழ்கை
நிலை
குலைந்தே
போய்விடும்
கண்ணை இமைதான் காப்பது
போல்
என்னை காக்க ஒரு
இறைவி
என்
பக்கம்
துணை
உண்டு
என்றும் என்னை
காக்க
ஒரு
இறைவி
என் பக்கம் துணை
உண்டு
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen