Sonntag, 24. Februar 2013


பரம் பொருள்

பிரம்மன் படைத்த அழகு சிலை நான்

ரவிவர்மா தீட்டிய ஓவியம் நான்

வாசம் வீசும் வண்ண மலர்களும் நான்

வீசி செல்லும் தென்றலும் நான்

வானில் ஓடும் வெண் மேகம் நான்

அந்தி வானில் தோன்றும் நிலவும் நான்

ஆடி  செல்லும் அலையும் நான்

பாடி செல்லும் சிறு பறவை நான்

எங்கும் நிறைந்த அழகே நான்

சுற்றி பார்கும்  சூரியன் நான்

சுற்றும் பூமியன் அழுகும் நான்

இயற்கையில் நிறைந்த உயிர்களும் நான்

எதிலும் நிறைந்த காட்சியும் நான்

எங்கும் இருக்கும் பரம் பொருள் நான்

கடவுள் என்னும் பரம் பொருள் நான்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen