Sonntag, 10. Februar 2013


காகங்கள் பிதிர்களா?

(காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கற்று கொடுத்தது யாருங்க? என்ன அருமையான பாடல்) இப்படியான பாடலை கேட்டாவது நாம் திருந்திறோமா?

காகத்துக்கு எல்லாரும் மரக்கறி சாப்பாடுதான் கூப்பிட்டு கொடுகிறாங்கள் ஏன் என்று தெரியவில்லை காகம் மரக்கறி சாப்பாடுதான் கேட்டிச்சா? ஆட்டு கறி நண்டு கறி மீன் கறியோடே சோறு வைத்தால் சாப்பிடாதா?

கேட்டால் காகம் நம்ம பிதிர்கள் என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் நம்ம பிதிர்கள் உயிர்ரோடு இருக்கும் போது மாடு ஆடு எல்லாம் சாப்பிட்டார்களே? ஆடு கோழி வெட்டி பலி கூட கொடுத்தார்களே இதுக்கு என்ன சொல்ல போறீங்கள்?

உள்ள அழுக்கு எல்லாம் சாப்பிடுற படியால்தான் காகங்களை மோட்சத்துக்கு போகாமல் இன்னும் ஆசைகளோடு பூமியிலே அலைகிற பிதிர்களாக மக்கள் நம்புகிறார்கள்

அந்த பிதிர்கள் மோட்சத்துக்கு போக ஏதாச்சும் வழி உண்டானால் செய்வதை விட்டு விரத நாட்களில் மட்டும் கா கா எண்று கத்தி கூப்பிட்டு சோறு போட்டு அது சாப்பிட்ட பின் நீங்கள் சாப்பிட்டு மற்ற நாட்களில் காகத்தை கண்டால் துரத்தி சனியன் காகம் வத்தல் வடகம் ஒன்றும் வெளியில் காய விடுது இல்லை என்று திட்டுவதும் எந்த மதத்தில் சேருது?

காகம் பாவம் அது அழுக்கை சாப்பிட்டாலும் தன் இனத்தை கூப்பிட்டு கொடுத்து சாப்பிடும் நல்ல குணத்தை கொண்டு இருக்கு அந்த காகத்தை கூட மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீரும் என்பதுக்காக தானே விரத நாட்களில் மட்டும் கூப்பிட்டு சோறு போடுறாங்கள்?

மனிதரின் சுயநலத்தை எண்ணி காகம் சிரிக்குமா? சிந்திக்குமா?

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen