நீ தொலையாது
என் எண்ணக்கனவுகளை
கொள்ளை அடித்தவனே
காந்த விழிகளாலே
காதல் கணை தொடுத்தவனே
குறும்பு மொழிகளாலே
என் இதயம் புகுந்தவனே
மொளன புன்னகையால்
என் மொளனம் கலைத்தவனே
என்ன நினைத்து நீ
சொல்லாமல் சென்றாயோ
மறு பிறவி இருந்துவிட்டால்
அதில் உன் கை பிடித்தே நான்
நடப்பேன்
நீ தொலையாது இருபதற்க்காய்
உன் கை பிடித்தே நான் நடப்பேன்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen