Sonntag, 24. Mai 2015


நட நட

 


நடப்பதுதான் நல்ல உடற் பயிற்ச்சி

நடப்பதால் மனதிற்க்கும் அமைதி கிட்டும்

நடப்பதால் ஆன்மாவுக்கும் நின்மதி கிடைக்கும்

கவலைகள் தொடர்ந்தால் எழுந்து நட

கோபம் வந்தால் அதை மறக்க நட

 

தீயவர்களை கண்டால் எட்டி நட

ஏளனம் செய்வோரைக் கண்டால் தூர நட

குற்றம் செய்பவரை கண்டால் தட்டி கேட்க்க பாய்ந்து நட

வறியவர்களை கண்டால் உதவி செய்ய கிட்ட நட

விழுந்தவனை கண்டால் தூக்கிவிட ஓடி நட

 

 

உண்டதை செமிக்க விரைந்து நட

உண்மையை சொல்ல பாய்து நட

பாதை மாறினால் திரும்பி நட

உறவுகளை அணைக்க அன்போடு நட

கடமைகள் முடிந்தால் கடவுளை தேடி அமைதியாக நட

நடப்பதை மறந்தால் கால்கள் இருந்தும் பயன் இல்லை

பயன் இல்லை

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen