நட நட
நடப்பதுதான் நல்ல உடற் பயிற்ச்சி
நடப்பதால் மனதிற்க்கும் அமைதி கிட்டும்
நடப்பதால் ஆன்மாவுக்கும் நின்மதி கிடைக்கும்
கவலைகள் தொடர்ந்தால் எழுந்து நட
கோபம் வந்தால் அதை மறக்க நட
தீயவர்களை கண்டால் எட்டி நட
ஏளனம் செய்வோரைக் கண்டால் தூர நட
குற்றம் செய்பவரை கண்டால் தட்டி கேட்க்க பாய்ந்து நட
வறியவர்களை கண்டால் உதவி செய்ய கிட்ட நட
விழுந்தவனை கண்டால் தூக்கிவிட ஓடி நட
உண்டதை செமிக்க விரைந்து நட
உண்மையை சொல்ல பாய்து நட
பாதை மாறினால் திரும்பி நட
உறவுகளை அணைக்க அன்போடு நட
கடமைகள் முடிந்தால் கடவுளை தேடி அமைதியாக நட
நடப்பதை மறந்தால் கால்கள் இருந்தும் பயன் இல்லை
பயன் இல்லை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen