வாழ்க்கை வண்டி
ஒவ்வொரு நாளும்
வேலைகள் முடிச்சு
நின்மதியாக பெரு
மூச்சு விட்டு
படுத்து எழும்பினால்
விடிஞ்சு போச்சு
மீண்டும் அடிச்சு
பிடிச்சு
அலுவல்களை பார்த்து
அவியல் துவையல்
என சமையலை முடிச்சு
மூக்கு முட்ட போட்டுப்
பிடிச்சு
திரும்பி பார்தால்
அன்றைய பொழுதும்
மறைஞ்சு போச்சு
இப்படியே தொடருது
பாரு
நிலையற்ற மனித
வாழ்கை
தொடருது பாரு
நாளும் பொழுதும் ஓடுது
பாரு
வாழ்க்கை என்னும்
வண்டி
ஓடுது பாரு
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen