Sonntag, 25. Mai 2014

துன்பமும் இன்பமும்



எழுத நினைத்த வார்த்தைகள்
எழுத முன்னே மறப்பதேன்
கண்ணில் கண்ட நிலவு கூட

கருமுகிலில் மறைவதேன்
கனவு கண்ட வாழ்க்கையும்

வாழ முன்பே தொலைவதேன்
அழகாய் பூக்கும் சில மலரும்

மாலை முன்பே வாடுவதேன்
கூடி பழகும் உறவுகளும்

ஒருநாள் பிரிந்து போவதுமேன் ...
துன்பமும் இன்பமும் மானிடர்க்கே

இறைவன் அழித்த வரமாய் மாறியதேன்
 

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen