Sonntag, 25. Mai 2014


நந்தியாவட்டை பூ
 

„காசம் படலங் கரும்பாவைத் தோஷமெனப்
பேசுவிழி நோய்கடமைப் பேர்ப்பதன்றி-யோசைதரு
தந்திபோ லேதெறிந்துச் சாறு மண்டை நோயகற்று
நந்தியா வட்டப் பூ நன்று“

நந்தியாவட்டை பூ நாகதோஸ்ம், ரோகம் என்பன போக்க வல்லதாம்,  இப்பூவில் அடுக்கு நந்தியாவட்டை ஒற்றை இதழ் நந்தியாவட்டை என இரண்டு வகை உண்டு.

இப்பூவை எடுத்து கண்ணை மூடிக்கொண்டு கண்ணுக்கு ஒத்தடம் கொடுக்க கண்ணில் உள்ள எரிச்சல்,  சூடு போன்ற நோய்கள் குறையும், கண்ணில் ஏற்படும் கக்கட்டி எனப்படும் கட்டிகள் உண்டாகும் நோய்க்கு முலைபாலில் தோய்த்த நந்தியாவட்டை பூவாலே ஒத்தடம் கொடுப்பது நம்ம  ஊரிலே வழக்கத்திலிருந்து வந்தது, இந்த வைத்திய முறையாலே சூட்டிலே உண்டாகும் இந்த நோய் குணமாகிறது.

இந்த தாவரம் ஒரு மூலிகை இனத்தை சேர்ந்தது, இதன் பூ முதல் வோர்வரை இயற்க்கை மருத்துவத்தில் பிரயோசனபடுகிறது, இதன் வேரை எடுத்து கசாயம் செய்து குடிக்க வயிற்று போக்கு குறையும் என்றும், வேரை பச்சையாகவே சப்பி துப்ப பல் வலி நீங்கும் எனவும் இயற்கை மருத்துவம் கூறுகிறது.

இந்த மலர் வாசம் மிகுந்தது, பூசைக்கு உகந்தது, அம்மனுக்கு மிகவும் பிடித்த மலராகும், இந்த தாவரத்தை கோவில் நந்தவனங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் நட்டுவைப்பார்கள், நந்தியவட்டை தாவரங்களை வீட்டில் வளர்பதால் அந்த தாவரம் பூக்களை பூக்கும் காலத்தில் வாசனை கிடைப்பது மட்டுமின்றி, நாகதோசங்களும் நீங்கபெறும் என்பது இந்துமதத்தில் கூறபடுகிறது.

நந்தியாவட்டை மலர்களினால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வருவோமாகில் எமது பொருள் பற்றாக்குறையை நீக்கி செல்வத்தை கொடுக்கும் என நம்பபடுகிறது, நமது வீடுகளில் வளர்க்கவேண்டிய செடிகளில் நந்தியாவட்டை மிகவும் அவசியமாக கருதப்படுகிறது, இத்தாவரம் ஐரோபாவிலும் வாங்ககூடியதாக உள்ளது இதனால் நாமும் இத்தாவரத்தை எமது வீட்டு தோட்டதிலோ, பல்கணிகளிலோ நடக்குடியதாக இருப்பது எமக்கு ஒரு அரிய வாய்பாக உள்ளது.

நந்தியவட்டை மலர்களை  பாரி ஜாதமலர் என்றும் சொல்வார்கள், இந்த செடி கற்பகவிருட்சங்களில் ஒன்றாகவும், அம்மனுக்கு மிகவும் பிடித்த மலராகவும் உள்ளது, நாமும் இந்த செடிகளை நம் வீடுகளில் நட்டு இதன் பலனை அனுபவிப்பதே சிறப்பாகும்.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen