Samstag, 26. April 2014


காற்றே நம் சுவாசம்
 

கடலுக்குள்ளே காற்று புகுந்தால்

பேரலையாய் அடிக்கும்

நாதஸ்வரத்தினுள்ளே காற்று நுளைந்தால்

நாதங்களின் ஒலி கேட்கும்

புல்லாங்குழலில் காற்று புகுந்தால்

இனிய ராகம் பிறக்கும்

மலர்கள் மீது காற்று உரசினால்

சுகந்த மாருதம் வீசும்

நாசியுடே காற்று நுளைந்தால்

சுவாசத்தின் ஜீவன் ஓசை கேட்கும்

வயிற்றினுள்ளே காற்று புகுந்தால்

கட முடா ஓசைதான் கேட்கும்

காற்றின் அசைவால் எங்கும் ஓசை

எங்கும் அசைவு

இந்த காற்று உடலை விட்டு

வெளியே போனால் அடங்கி

போகும் மூச்சு

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen