கூர் விழிகள்
பிறை போன்ற நெற்றியிலே
சுரள் முடிகள் தொங்க
வளைந்தோடும் கரு இமையிரண்டில்
கூர் விழிகள் எனை நோக்க
அரும்பு மீசை அழகு தர நீ
அறிவான கதைகள் பேச
அதில் ஆயிரம் அர்த்தங்களை கண்டு
உன் அறிவை நான் வியந்து நிற்க்க
உன் புன்னகையால் என்னை
கவர்ந்து நின்றாய்
உன் குறும்பு மொழியால் என்னை
சிரிக்க வைத்தாய்
காதல் கொஞ்சும் உன் விழிகள்
என்னோடு கலந்துவிட
இரவும் நிலவும் கதை பேச
எத்தனை இரவுகள் உறவாடினாய்
நான் மடியும் வரை உனை
நினைக்க வைத்தாய்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen