Donnerstag, 20. Februar 2014


கூர் விழிகள்

பிறை போன்ற நெற்றியிலே

சுரள் முடிகள் தொங்க

வளைந்தோடும் கரு இமையிரண்டில்

 கூர் விழிகள் எனை நோக்க

அரும்பு மீசை அழகு தர நீ

அறிவான கதைகள் பேச

அதில் ஆயிரம் அர்த்தங்களை கண்டு

உன் அறிவை நான் வியந்து நிற்க்க

உன் புன்னகையால் என்னை

கவர்ந்து நின்றாய்

உன் குறும்பு மொழியால் என்னை

சிரிக்க வைத்தாய்

காதல் கொஞ்சும் உன் விழிகள்

என்னோடு கலந்துவிட

இரவும் நிலவும் கதை பேச

எத்தனை இரவுகள் உறவாடினாய்

நான் மடியும் வரை உனை

நினைக்க வைத்தாய்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen