Donnerstag, 20. Februar 2014

 

ஒரு குட்டி கதை (மானிடர் இன்பம்)

ஒரு நாள் ஒருவன் காட்டுக்குள் சென்றபோது ஒரு சிங்கம் அவனை துரத்த தொடங்கியது சிங்கத்துக்கு பயந்து ஓடியவன் ஒரு பாழடைந்து கிடந்த கிணற்றிலே தவறி விழுந்து விட்டான் விழும் போது அவன் கிணற்றுக்குள் சுவரில் முழைத்து ருந்த ஒரு மரகிழையை பிடித்து விட்டதால் தண்ணிக்குள் விழாமல் தொங்கி கொண்டு நின்றான்

அந்த கிணற்றை குனிந்து பார்த்தான் அதள பாதளம் போலே மிக ஆழமான கிணறு அவன் விழுந்தால் மீண்டும் மேலே வரமுடியாத ஆழம் அத்துடன் கிணற்றுக்குள்ளே ஒரு முதளை இவனை பிடிக்க வாயை பிளந்து கொண்டு கிடந்தது

ஐய்யோ கடவுளே என்னை காப்பாற்றும் என்று அலறியபடி மேலே பார்த்தான் மேலே அவன் தொங்குகிற மரகிளையிலிருந்து ஒரு நாகம் அவனை எட்டி பிடிக்க வந்து கொண்டிருந்தது கையை விட்டால் முதளை வாயில் அகபடுவான் கையைi விடாது போனால் பாம்பு வாயில் தீண்ட ப்படுவான் அவன் மனதிலே பயம் குடிகொள்ள இறைவா என்னைக் காப்பாற்றும் என்று அழுதபடியே அண்ணாந்த பார்த்து கத்தி கொண்டே இருந்தான்

அவன் ஆடியதால் அந்த மரதிலிருந்த தேன் கூடு உடைந்து தேன் துளி துளியாய் அவன் முகத்தில் ஒழுகியது அதை கண்ட அவன் அந்த தேன் துளியை நாவினால் எட்டி சுவைத்தான்  இந்த ஆபத்தான நிலையிலும் அவன் அந்த தேனை சுவைக்காமல் விடவில்லை இது போலேதான் இந்த புவியில் மனிடரது மாய இன்பம் என்கிறது இந்த சிறுகதை

மானிட  ஜென்மம் எடுத்தவனும்

இந்த மாய உலகில் வாழ்பவனும்

வாழ்வில் கோடி துன்பம் வரினும்

ஒரு துளி தேனை நாவினில் சுவைபது போலே

கிடைபதுதான் இந்த மானிடர் இன்பம்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen