மாலை
மங்கும் நேரம்
பூமியை
வலம் வந்த சூரியனோ
செந்தணல்
ஆகி விட்டான்
மாலை
கதிரவன் மயங்கி கீழ் விழ
காரணம்
கேட்ட வானத்தின் மீது
அவன்
சீறி சினம் கொண்டு செந்தணலை கக்க
உலகில்
மானிட தர்மம் அழிந்து விட்டதால்
ஆதவன்
கோபம் கொண்டே சிவந்து விட்டான் என்று
மேகம்
உணர்ந்து கவலையில் கறுத்ததே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen