Sonntag, 17. November 2013


உன் மூச்சில்
 

உன் கண்ணில் படவே

நானும் மண்ணில் பிறந்தேன்

நான் உன் உணர்வில் ஒன்றியே

உறவாய் கலந்தேன்

உன் மனதை திறந்தே நான் எண்ணில்லா

கவிதைகள் படித்தேன்

சில சமயம் உன் மார்பில் சேரும் மதளையாகி

என் அன்னை மடியாய் உனை நினைப்பேன்

மறு கணம் என் உயிரின் ஒளியாய்

உனை நினைப்பேன்

நீ என்னை தீண்டிய தென்றல் அல்ல

என்னை தாக்கிய புயலானாய்

எமக்குள் உள்ள ஒரு பந்தம்

யாருக்கும் புரியா சொந்தமடி

இது போன ஜென்ம தொடர்பு என்பேன்

ஏழு ஜென்மமும் தொடரும் என்பேன்

காலங்கள் கடந்தும் வளருமடி

நமக்குள் கவிதையாய் காதல் வளருமடி

ஒரு முறை தன்னும் உன் பேர் சொல்லாமல்

என் இதயம் துடித்ததில்லை

கடல் அலை ஓங்கி அடிப்பது

கரையை சேர்ந்திடவே

என் மூச்சு காற்றும் ஒங்கி இரைவது

உன் மூச்சில் கலந்திடவே

வானில் உலவும் நிலவும் வானத்தை

தொடவில்லை

என் கண்ணில் உலவும் பெண் நிலவே

உன் உயிரில் கலக்கும் ஒரு வேளை

என் வாழ்வின் முழுமையடி

(வேல்)

Keine Kommentare:

Kommentar veröffentlichen