Sonntag, 25. August 2013


கருவினிலே
 
 
 

கருவினிலே மதழையாகி

கர்மமே வினையாகி

பிறப்பில் மனித உருவாகி

கண் இருந்தும் குருடாகி

கவலைகள் பல உருவாகி

மமதையிலே மனம் வீணாகி

வாழ்வதே மண்ணில் சுமையாகி

ஒரு நாள் காயமே பொய்யாகி

சாம்பாலகி நீ பொடியாகி

உன் சுவடு கூட மறைவாகி

முடிவினிலே போவதுதான் மெய்யாகி

மெய்யாகி

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen