Sonntag, 25. August 2013


பொன்வானம்

பொல பொலவென விடிகின்ற அதிகாலை எங்கே

காற்றோடு கலக்கின்ற கோவில் மணியோசை எங்கே

காலை கதிரவன் ஒளியில் மின்னும் பொன் வானம் எங்கே

இசை பாடி துயில் எழுப்பும் புல்லினங்கள் எங்கே

அதிகாலை கூவி சேதி சொல்லும் சேவல்களும் எங்கே

ஓசையின்றி மலர் விரியும் காட்சிகளும் எங்கே

பசும் புல் வெளியில் துளித்து நிக்கும் நீர்திவலை எங்கே

மலர் வாசமோடு வீசி வரும் மாருதம்தான் எங்கே

நம் கண்ணை கட்டி இழுத்த இயற்கை காட்சிகள்தான் எங்கே

இயற்கையிடம் மனம் பறி கொடுத்து நின்ற காலங்கள்தான் எங்கே

இன்று கண் பனித்து மனம் பதைத்து வாடுகிறேன் இங்கே

தொலைத்து விட்ட இனிமைகளை எண்ணி தவிகிறேனே இங்கே

தவிக்கிறேனே இங்கே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen