இதுதானே வாழ்க்கை
சக்கரம்
வாழ்ந்தது போல் நீ நடித்தாய்
வாழ்வதாக நானும் நடித்தேன்
உலகமேடையிலே நீயும் நானும் நடிகரே
எச்சில் சோற்றை உண்பவனும்
அடுத்தவன் இலையில் எடுப்பவனும்
எல்லமே பசிக்குதான்
சிலர் வாழ்வு உடல் பசிக்குதான்
ஆட்டுக்கல்லு அம்மி கல்லு என
பூட்டி வைத்த வரும்
போகும் போது ஒரு கூழாம் கல்லை
கூட எடுத்து செல்லவில்லை
காணி வீடு என பொத்தி பொத்தி
பாத்த நிலம் இன்று
யார் யாரோ வந்து போகும்
சந்தை மடம் ஆனது
ஊருக்கு உலை வைப்போர்
வீட்டில்
இன்று உலை
வைக்கவில்லை
இது கொரோனா தந்த தண்டனையா
இல்லை கடவுள் கொடுத்த தண்டனையா?
யார் அறிவார் உலகில்?
எவர் வருவார் எவர் போவார்
என்பதும் தெரியாது
சுயநலலமான வாழ்க்கையிலே
யாரும் உண்மை
அன்பும் இல்லை
நன்றி உணர்வும் இல்லை
யார்தான் ஒட்டி இருந்தாலும்
பாடையிலே போகையிலே
யாரும் கூட வருவதுமில்லை
காதென்ன தோடேன்ன கழுத்து நிறைய
நகையென்ன கை குலுங்க வளையல் என்ன
பட்டென்ன பொட்டென்ன பவிசாய் வாழ்ந்தென்ன
பேய் பிடித்தால் மூலையிலே இருளோடு ஒதுங்கிடுவர்
தீயில் இட்டால் எல்லாமே தீஞ்சுதானே போய் விடும்
காற்றை உள்ளிழுத்து நீரை பருகி
நிலத்தில் நடந்து ஆகாயத்தை பார்த்து
கடைசியிலே தீயோடு போகுது
இந்த ஐம்பூதங்களின் சேர்கையே
இந்த உடலை தந்தது அந்த
ஐம் புதங்களினாலே உயிரும் வாழுது
அந்த ஐம் புதங்களுக்குள்ளே உடலும் சாயுது
சுத்தி சுத்தி பூமி வருகுது
அதில் சுத்தி சுழன்று உறவும் பெருகுது
வந்து போகும் உறவும் கூட நடக்கும் பயணியும்
பாதை மாறி போகுது பயணங்களும் மாறுது
மனித நேயம் ஒன்று மட்டும்
மாறாது இருந்து
விட்டால்
மானிட வாழ்க்கையும் மாசாக போகும்
இதுதானே வாழ்க்கை
சக்கரம்
அதுவே ஓம் என்னும் தத்துவம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen