தனி வழியே
என்னத்தை சொல்ல ?
நேரமோ ஓடுது
நினைவுகளும் கூடுது
வாழ்க்கை மட்டும் விட்ட இடத்தில்
அரக்காமல் நிக்குது
காலங்களும் மாறுது
பருவங்களும் குளிரும் மழையுமாய்
வந்து போகுது
எம்மை சுற்றிய மனித உருவங்களும்
நாளுக்கு நாள் மாறுது
அன்பு என்று வந்த உறவும்
வம்பாகி போகுது
நட்பு என்று நினைபதும்
நயவஞசகமாய் ஆகுது
மாறத அன்பும் நேர்மையான நட்பும்
உலகில் இல்லையென்றானது
வருபவர் வரட்டும் போபவர் போகட்டும்
மனித வாழ்வோ சில
நாள்
இதில் யார் வந்தென்ன
யார் போய் என்ன
நம்ம வழி என்றும் தனி வழியே!
Keine Kommentare:
Kommentar veröffentlichen