Samstag, 27. Oktober 2018


Me too யாருக்கு? 

சினிமா துறைக்கு போன பின்பு பெண்களுக்கு கற்பா மானமா
எல்லாம் அரை குறை ஆடையோடு காற்றிலை பறக்குது பாருங்கோ!
துடை தெரிய மெல்லிய ஆடைகளை உடுத்தி எத்தனை பேரு முன்னாலே வலம் வரும் பெண்களுக்கு காசுதான் கருத்தாய் இருக்கு கற்பு அல்ல கவர்சியை காட்டுவதே ஆடவர் கண்ணை கவரதானே?
இதற்கு பிறகு அவன் தொட்டான் இவன் தொட்டான் என்று புலம்புவதில் பயன் இல்லை!
ஆடைகள் எப்போதும் பெண்ணுக்கு அழகை கூட்டவே ஒழிய கவர்சியை காட்ட அல்ல, முள்ளு வேலியாகதான் ஆடைகள் இருக்க வேணும்,
தப்பான கண்ணோடு நோக்குபவனை கண்ணிலையே முறைக்கலாம், பெண்கள் நடனம் பழகுவதைவிட தற்பாது காப்பு கலையை பழக வேணும் என்பதை ஏன் சொல்கிறார்கள் தன்னை தானே பாது காக்க வேணும் என்பதற்காகதானே?
தன்னை கெடுத்தவனை அன்று அந்த பெண் ஒரு கத்தியாலே குத்தியிருந்தால் இந்த கலவரமே வந்திருக்காது
தன்னை கொல்ல வந்த பசுவை கூட கொல்லலாம் என்று நம்ம பகவத் கீதையே சொல்கிறது.
இதை விட்டு போட்டு கன நாளைக்கு பிறகு கத்தி கத்தி பேசுவதில் நியாயம் தான் பிறக்குமா?

ஆண்களை கெடுகிற பெண்களும் உண்டு
ஒரு சில நடிகர்கள் தற்கொலை முயற்சி கூட செய்திருக்கிறார்கள் சில பெண்களாலே!
அதனாலே Me too சொல்லுற எல்லாருக்கும் இரக்கபடகூடாது.
உண்மை உண்மையாக தெரிய வேணும் சும்மா நாமும் ஏதாச்சும்
சொல்ல வேண்டும் என்று சொல்லி வைக்க கூடாது.

கற்பு நெறியொடு வாழ்பவருக்குதான் கற்பு  பறி போகும்
இப்ப தாமாகவே விரும்பி கற்பை இழக்கிற பெண்கள் எமது இளம் சந்ததிகளிலேயே உருவாகி விட்டது.
அனேகமாக ஒரு பெண்ணோ ஒரு ஆணோ ஒருவன் ஒருத்தியோடு வாழ்ந்ததாக வாழ்வதாக
புலம் பெயர் வாழ்வில் நான் கண்கூடாக காணவில்லை ஒன்று போனா இன்னும் ஒன்று என்று மாறி மாறி கைமாறி போகுது கற்பு!
 இதற்கு இந்த இளம் சமுதாயம் கெட்டு போக பெற்றவர்களும் காரணமாகதான் இருக்கிறார்கள்.

கற்பா அப்படி என்றால் என்னவென்று கேட்கிறார்கள் சில பேரு புலம் பெயர் வாழ்வில் மனிதர்களுக்கு மட்டுமல்ல சுதந்திரம் கிடைத்தது இந்த
கற்புநெறி, ஒழுக்கம், நமது கலாசாரம் என்பதுக்கும்தான், இவை யாவும் போன இடம் தெரியாமல் போகுது.
யாராவது ஒரு குடும்பம் பிரிந்து விட்டால் வாயை பிளந்து கொண்டு கதை பேசும் தமிழ் குடும்பங்களில் அவர்களது பிள்ளைகள் மூன்று நாலு தடவை என்று மாறி மாறி சோடிகளை மாற்றி கொண்டே போவதும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வதும் ஒரு தவறான விடயமாக அவர்களுக்கு தெரிவதில்லை பாருங்கோ!
அது மட்டும் ஏன் மனதில்  தப்பு என்று தெரிவதில்லையா?
இல்லாவிட்டால் அந்த ஒழுக்கம் என்பது எனி நம் சமுதாயத்துக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டார்களா?
கணவன் மனைவி வாழ்கையிலே ஒழுக்கத்தை அதில் ஒருவர் கடை பிடிக்காமல் போவதால்தான் குடும்பங்களே பிரிகிறது!

ஒழுக்கமாக வாழும் மனிதர்க இந்த புலம் பெயர் வாழ்வில் விரல் விட்டுதான் எண்ண வேண்டும்.
எல்லாரையும் நான் குற்றம் சொல்லவில்லை ஒரு சிலர் இன்னும் தமது கலாசாரத்தோடு வாழ்கிறார்கள்தான் ஆனாலும் அவர்களை காண்பதே அரிதிலும் அரிதாக காண படுகிறது.
இதை ஒவ்வொருத்தரும் சிந்தித்து பாருங்கள் உங்கள் வாழ்வில் நடப்பது என்ன ? உங்கள் பிள்ளைகள் வாழும் வாழ்க்கை என்ன ?
கவி மீனா






Keine Kommentare:

Kommentar veröffentlichen