Freitag, 26. Oktober 2018


எதிரும் புதிருமாய்
காலத்தின் கோலமிது
சிலர் வாழ்வு பாதியிலே முடியும்
சிலர் வாழ்வு பாதியிலே பிரியும்
பாதைகள் மாறும் பயணங்கள் தொடரும்
எதிரும் புதிருமாய் போகும்
ஓட்டியிருந்த தண்ட வாளம்
தனி தனியாய் பிரியும்
சேர்ந்து இருந்த உறவுகளும்
வேறு திசையில் போகும்

காற்றாடி அறுந்தது போல்
மனித உறவுகளும் ஒரு நாள்
அறுந்து விடும்
நீ யாரோ நான் யாரோ
என்று கேட்டு செல்லும்

ஒரு சட்டியில் சேர்ந்து உண்டவனே
உன் உணவில் நஞ்சை போடுவான்
உத்தமன் என்று நம்பியவன்
உன் உயிருக்கே உலை வைப்பான்
கை கொடுத்து தூக்கி விட்டால்
எழும்பியவன் உன்னை இழுத்து
விழுத்திடுவான்
இது மனிதர்களின் சுபாவமா?
இல்லை விதி செய்யும் சதியா?
கவி மீனா


Keine Kommentare:

Kommentar veröffentlichen