எதிரும் புதிருமாய்
சிலர் வாழ்வு பாதியிலே
முடியும்
சிலர் வாழ்வு பாதியிலே
பிரியும்
பாதைகள் மாறும்
பயணங்கள்
தொடரும்
எதிரும் புதிருமாய்
போகும்
ஓட்டியிருந்த தண்ட
வாளம்
தனி தனியாய் பிரியும்
சேர்ந்து இருந்த
உறவுகளும்
வேறு திசையில் போகும்
காற்றாடி அறுந்தது
போல்
மனித உறவுகளும் ஒரு
நாள்
அறுந்து விடும்
நீ யாரோ நான்
யாரோ
என்று கேட்டு செல்லும்
ஒரு சட்டியில் சேர்ந்து
உண்டவனே
உன் உணவில் நஞ்சை
போடுவான்
உத்தமன் என்று
நம்பியவன்
உன் உயிருக்கே உலை
வைப்பான்
கை கொடுத்து தூக்கி
விட்டால்
எழும்பியவன் உன்னை
இழுத்து
விழுத்திடுவான்
இது மனிதர்களின் சுபாவமா?
இல்லை விதி செய்யும்
சதியா?
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen