Dienstag, 12. Februar 2019


அந்தி மாலை

அந்தி மாலை அந்த வேளை
அவன் வரவை தினம் பார்த்து
தவித்திருக்கும் ஒரு பாவை
காதலில் விழுந்தே
உலகை மறந்தது ஒரு காலம்

இன்று உலகை  அறிந்து
உண்மையை புரிந்து
வாழ்வை துறந்து துறவு கோலம்
பூண்டதொரு பாவை

பருவ காலங்கள் மாறுவது போலே
மனித மனங்களும்
கால போக்கில் மாறுவதும் ஏனோ?
கவி மீனா



Keine Kommentare:

Kommentar veröffentlichen