ஏன்டி இந்த வாழ்க்கை
பசி வந்தால் சோற்று
வண்டி
சோற்றை தேடுது
கண்டது எல்லாம் திண்டுவிட்டால்
இந்த வண்டி தொப்பையாகுது
மாடு செய்த பாவத்தக்கு
சுமை ஏறுது ஆனால்
ஐல் ஐல் என்று
மாட்டு
வண்டி
ஜோரா போகுது
விதி வந்து பிழைத்து
விட்டால்
அச்சாணி உடைந்து
போகுது
வாழ்க்கை வண்டி
ஓடையிலே
குடை சாயுது
கொம்பு தேனுக்கு
ஆசை பட்டால் நொண்டி
மனம்
நோந்து போகுது
பாண்டி மாங்காய் வாங்கி
உப்பு மிளகாய் தூளும்
தொட்டு
உண்ட காலம் தூர
போச்சுது
தோண்டி தோண்டி பார்த்தாலும்
இறைவன் அருள் இல்லையென்றால்
மண்ணில் பொன்
கிடைக்காது
கிண்டி கிளறி பார்த்து
விட்டால்
இந்த மனிதன் கதை
நாறி
போகுது
ஏண்டி உனக்கு இந்த
வாழ்க்கை
என்று மனம் நோகுது
அதை எண்ணி பார்த்தால்
உலக வாழ்க்கை வெறுத்து
போகுது
ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடிய பின் இறுதியிலே
மனிதன் வாழ்க்கை
ஆண்டி ஆகுது
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen