முதுமையிலே தனிமை
என்னுள் இளையோட
யாரும் கூட வர
போவதில்லை
என நினைத்து பார்த்தேன்
பாதையிலே வருபவர்
எல்லாம்
பாதி வழியில் மாறிடுவர்
கடைசி வரை சேர்ந்திருப்போர்
ஒன்றாய் மடிவதில்லை
என்றோ ஒரு நாள்
யாவரும்
தனிமையை அறியதான்
வேண்டும்
இதுதான் வாழ்க்கை!
இளமையில் கூடி
வாழ்ந்து
கோடிகளை ஓடி
சேர்த்து
முதுமையிலே தனிமை
வந்து
மனம் நொந்து
இறைவனை நினைக்க வைக்கும்
அதுவும் இறைவன்
இட்ட வழியென நினைத்தால்
காற்றில் கரையும்
மேகம்
போலே
எம் துயரும் ஓடி
போகும்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen