Sonntag, 6. März 2016

சிரிக்க வைத்து
எந்த குழந்தையும் பிறக்கும்
 போது சிரிப்பதில்லை
மனித வாழ்வின் துன்பத்தை
அது அறிந்தே அழுது கொண்டே பிறக்கிறது
அழுதுகொண்டே பிறந்த மனிதனுக்கு
 
இறக்கும் வரை அழுகை ஓய்வதில்லை
உலகில் எங்கோ ஒருவன் சிரிக்கின்றான்
அவன் வாழும் போதும் சிரிக்கின்றான்
ஒரு சிலரே அடுத்தவரை சிரிக்க வைத்து
தானும் மகிழ்கின்றான்
மனிதர் படும் துயரை கண்டு
ஆண்டவன் எங்கோ இருந்து சிரிக்கின்றான்
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen