Freitag, 25. März 2016

அம்பிகை பாதம்
உலகம் என்னும் மேடையிலே
நாடகம் ஆடிடும் மானிடரே
நாளை என்பது நிச்சயமில்லை
யாரை நம்பி நாமிருப்போம்
 
பணமும் பதவியும் உள்ளவரை
உணவை கண்ட காக்கைள் போல்
ஆயிரம் உறவுகள் சுற்றி வரும்
அன்பு இல்லா உலகத்திலே
ஆறுதல் சொல்ல யார் வருவார்
 
ஊருக்காக உறவுக்காக வாழ்வதிலே
நம் உயிர் மூச்சும் நின்று விடும்
வந்த வழியே போவதற்கு
 வழி துணை கூட தேவையில்லை
 
பொய்யான உறவை நம்பி
புளிதியிலே புரளாது
அக இருளை போக்க
அம்பிகை பாதம் நினைத்திடுவோம்
அவள் பாதம் நினைத்திடுவோம்
 
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen