அம்பிகை பாதம்
உலகம் என்னும் மேடையிலே
நாடகம் ஆடிடும் மானிடரே
நாளை என்பது நிச்சயமில்லை
யாரை நம்பி நாமிருப்போம்
பணமும் பதவியும் உள்ளவரை
உணவை கண்ட காக்கைள்
போல்
ஆயிரம் உறவுகள் சுற்றி
வரும்
அன்பு இல்லா உலகத்திலே
ஆறுதல் சொல்ல யார்
வருவார்
ஊருக்காக உறவுக்காக
வாழ்வதிலே
நம் உயிர் மூச்சும்
நின்று
விடும்
வந்த வழியே போவதற்கு
வழி துணை கூட
தேவையில்லை
பொய்யான உறவை
நம்பி
புளிதியிலே புரளாது
அக இருளை போக்க
அம்பிகை பாதம்
நினைத்திடுவோம்
அவள் பாதம் நினைத்திடுவோம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen