Sonntag, 30. August 2015


ஏன் மறந்தாய் மானிடனே

 மண்ணுக்குள்ளே போகும் மானிடனே

மனதை தொட்டு பாருங்க

கொஞ்சம் கண்ணை மூடி யோசிங்க

நாடும் நகரமும் வேணும் என்று

அடித்து புரண்டு நரகத்தை நாடும் மானிடனே

கொஞ்ச நேரம் சிந்தியுங்க

 

ஜொலிக்கும் வைரமும் மண்ணுக்குள்ளே

தகிக்கும் தங்கமும் மண்ணுக்குள்ளே

முளைக்கும் பெரும் விருட்சமும்

விதையாய் மண்ணுக்குள்ளே

முத்தும் மாணிக்கமும் மண்ணுக்குள்ளே

 

ஊத்துத் தண்ணியும் மண்ணுக்குள்ளே

மாடி வீடு கட்ட உதவும்

கல்லுகூட மண்ணக்குள்ளே

ஓடும் நதியும் மண்ணக்குள்ளே

இரும்பு கூட மண்ணக்குள்ளே

உன் இரும்பு இதயம் கூட

ஒரு நாள் மண்ணுக்குள்ளே

 

இத்தனையும் ஆண்டு

ரசிக்கும் மானிடனே

உன்னை ஆட்டி படைக்கும்

ஆண்டவன் கையை மறந்து

நீஅதிகாரமும் ஆணவமும் கொண்டு

அலைவதினால் பயன் உண்டோ

 

அழிகின்ற உடலோடு அலைவதில்தான்

பயன் உண்டோ

ஒரு நாள் நீயும் இந்த மண்ணுக்குள்ளே

என்பதை ஏன் மறந்தாய்

ஏன் மறந்தாய் மானிடனே

 
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen