Sonntag, 8. Februar 2015


விதி மட்டும்

 
 
 
 
வானம் இருக்கு நிலவும் இருக்கு

நித்தம் இரவு வந்திருக்கு

நிலவை மட்டும் காணவில்லே

காசிருக்கு கார் இருக்கு

வீடுஇ ருக்கு   செல்வ வளம்  இருக்கு

விதி மட்டும் நல்லா இல்லே

வெளி நாடு வந்த தமிழருக்கு

விதி மட்டும் நல்லா இல்லே

பேர் இருக்கு புகழ் இருக்கு

பேர் சொல் பிள்ளைகளும் இருக்கு

ஆனாலும் நின்மதியில்லே

பட்டிருக்கு பொட்டிருக்கு

பொன்னிருக்கு பூவிருக்கு

ஆனாலும் புன்னகை இல்லே

நாடிருக்கு நாட்டிலே வீடு இருக்கு

நம்ம உறவுகளும் அங்கிருக்கு

நாம் மட்டும் நாட்டிலே இல்லே

நாடோடியாய் வந்த தமிழனுக்கு

நாதியும் இல்லே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen