விதி மட்டும்
வானம்
இருக்கு நிலவும் இருக்கு
நித்தம்
இரவு வந்திருக்கு
நிலவை
மட்டும் காணவில்லே
காசிருக்கு கார் இருக்கு
வீடுஇ ருக்கு செல்வ வளம் இருக்கு
விதி மட்டும் நல்லா இல்லே
வெளி நாடு வந்த தமிழருக்கு
விதி மட்டும் நல்லா இல்லே
பேர் இருக்கு புகழ் இருக்கு
பேர் சொல் ல பிள்ளைகளும் இருக்கு
ஆனாலும் நின்மதியில்லே
பட்டிருக்கு பொட்டிருக்கு
பொன்னிருக்கு பூவிருக்கு
ஆனாலும் புன்னகை இல்லே
நாடிருக்கு நாட்டிலே வீடு இருக்கு
நம்ம உறவுகளும் அங்கிருக்கு
நாம் மட்டும் நாட்டிலே இல்லே
நாடோடியாய் வந்த தமிழனுக்கு
நாதியும் இல்லே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen