Samstag, 14. Juni 2014


அகவை 60

அகவை அறுவதை எட்டிய

ஆறடி மனிதன் என் அன்பு சகோதரன்

பண்பிலும் உயர்ந்த ஒரு குலமகன்

பாசத்தில் சிறந்த நல்ல தமிழ் மகன்

எமக்குள் வயதில் வித்தியாசம் ஓர் ஆண்டே

ஆனால் பாசத்தில் இல்லை நமக்குள் வேற்றுமை

என் சகோதரன் நேர்மைக்காக வாழ்பவன்

நெஞசில் ஈரம் சுமந்தே மாய்பவன்

அறிவும் அழகும் கொண்ட மனைவியை

அடக்கி ஒடுக்கி வீட்டில் இருத்திவிட்டு

உல்லாசமாக ரை சுற்றும் ஆண்மகன் அல்ல

என் சகோதரன்

நோயில் சிறகொடிந்த பறவை போலே

துணை நின்றாலும்  ஆதரவு கரம் கொடுத்து

அணைத்து வாழ்வதுதான் நற் புருஸன்

என்று எடுத்த காட்டாய் வாழ்பவன்

என் அன்பு சகோதரன்

அவன் உயிரோ அவனிடத்தில் இல்லை

அன்புமகள் சன்டியே அவன் உயிராகும்

அறுபதை எட்டினாலும் அன்பில் குறையாத அண்ணன்

; அன்பு செல்வியின் சீரும் சிறப்பும் கண்டு

நூறு ஆண்டு வாழவேணும்

என மனதார வாழ்த்துகிறேன்

வாழ்க வழமுடன்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen