Dienstag, 21. Mai 2013


ஒரு துளி

ஒரு துளி விசம் உயிரை குடிக்கும்

ஒரு துளி குருதி உயிரை காக்கும்

துளி துளியாய்  மழை துளி

துள்ளி ஓடும் நீரில் நீர் குமிழி

ஒரு துளி நீரில் உருவேடுத்த 

மனித வாழ்வின் மாய நிலையை

எடுத்து சொல்லுது ஒரு நொடியில்

அழிந்து  போகும்  நீர் குமிழி

காணும் விழிகளில் கண்ணீர் துளி

அவர் கவலையை காட்டும் ஒரு துளி

உழைபவன் உடம்பில் வியர்வை துளி

சொட்டுது தினமும் நிலத்திலே

அதில் முழைப்பதுதானே அரிசி மணி

கொட்டி நனைக்கிறது பனி துளி

பகலவன் கண்டு மறையும் வரை

புல்லின் நுனியில் பனி துளி

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen