அன்னை
ஒரு தாயின் அன்பை
தனயன்
மறந்தால்
தரணி வாழ்வும் தவறியே
போகும்
கருவில் சுமக்கும்
போதும்
தொப்புள் கொடியால்
உயிரை
காத்தாள்
மடியில் சுமந்த
போதும்
முலையின் அமுதம்
தந்தே
அணைத்தாள்
கையில் சுமக்கும் போதும்
நிலாவை காட்டி சோறும்
ஊட்டினாள்
காலம் உருண்டு போன
போதும்
உன்னை
மனதில் சுமந்தே கடமைகள்
செய்தாள்
இறுதிகாலம் வரையும்
உன்
நினைவில்
அன்னை மகிழ்ந்தே மடிவாள்
அன்னைதானே பெண்ணின்
பெருமை
படைபின் மூலம்
அவளே
கடவுளின்
மறு
வடிவம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen