Mittwoch, 27. März 2024

வாழதான் முடியவில்லை

தட்டு நிறைய சோறு இல்லை

பெட்டி நிறைய மருந்திருக்கு

வட்ட நிலா வானில் இல்லை

வாழ்கையிலும் வெளிச்சம் இல்லை

எட்டு எட்டாய் பிரித்தாலும்

இன்பம் மட்டும் எட்டவில்லை

 

விட்டு விட்டு போகும் உறவுகள்

கை விட்டாலும் விடுகுதில்லை

பட்டு பட்டு தெளிந்தாலும்

பாதையிலே தெளிவு இல்லை

சொல்லி சொல்லி அழுதாலும்

துன்பத்துக்கும் முடிவு இல்லை

 

மனித வாழ்கை துன்பம் என்று

முன்னோர் சொல்லியும் புரியவில்லை

வாழ்ந்து பார்த்தால் என்ன என்று


வந்து விட்டேன் வாழதான் முடியவில்லை

இவ்வுலகில் வாழதான் முடியவில்லை

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen