வாழதான் முடியவில்லை
தட்டு நிறைய சோறு இல்லை
பெட்டி நிறைய மருந்திருக்கு
வட்ட நிலா வானில் இல்லை
வாழ்கையிலும் வெளிச்சம் இல்லை
எட்டு எட்டாய் பிரித்தாலும்
இன்பம் மட்டும் எட்டவில்லை
விட்டு விட்டு போகும் உறவுகள்
கை விட்டாலும் விடுகுதில்லை
பட்டு பட்டு தெளிந்தாலும்
பாதையிலே தெளிவு இல்லை
சொல்லி சொல்லி அழுதாலும்
துன்பத்துக்கும் முடிவு இல்லை
மனித வாழ்கை துன்பம் என்று
முன்னோர் சொல்லியும் புரியவில்லை
வாழ்ந்து பார்த்தால் என்ன என்று
வந்து விட்டேன் வாழதான் முடியவில்லை
இவ்வுலகில் வாழதான் முடியவில்லை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen