Sonntag, 18. Februar 2024

 

சட்டி பிரட்டி

இது என்ன தலைப்பு என சிரிக்காதீர்கள் வாசித்து பார்த்து உண்மையை புரிந்து கொள்வதே சறப்பு


இவங்க ஊரிலை சட்டி பிரட்டி திண்டவங்கள் இங்கை வந்து பெரிய ஆள் மாதிரி கதை விடுகினம் எனடு சொல்பவர்கள் உண்டு என் காது படவே ஒருத்தர்  இப்படி சொன்னதை கேட்டும்  இருக்கன்

ஆனால் சட்டி பிரட்டி சாப்பிட்டவன்தான் ஊரிலை சுகமாக நீண்ட காலம் வாழ்ந்து இருக்கிறான் காரணம் என்ன தெரியுமா?

 நாம சமைக்கும் போது வெந்தய குழம்பு, பொரித்த வத்தல் குளம்புகளை வைக்கும் போது  வதக்க போடுகிற வெந்தயம் பெரும் சீருகம் கடுகு எல்லாம் குழம்பு சட்டியிலை அடியிலைதான் இருக்கும் மேலால குழம்பை எடுத்து சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு போறது பெரிய விடயமே இல்லை

கடைசியலை அந்த சட்டிக்குள்ள இருக்கிற குழபுக்குள்ளே சோற்றை போட்டு பிரட்டி எடுக்கும் போதுததான் அந்த வெந்தயம் சீகம் கடுகு எல்லாம் சோற்றுடன் சேர்ந்து வருகிறது பாருங்க , அந்த சோற்றை வெந்தயத்தோடும் சீரகம் கடுகும் சோத்து சாப்பிட்டவனுக்குதான் ஆரோக்கியம் அதிகமாகிறது, பிரட்டின சட்டி சோற்றை சாப்பிட்ட நாய் கூட நோயின்றி வாழ்ந்ததுதாள் உண்மை!

 அவனுக்கு சுகர் வருத்தம் இருந்தாலும் குறைகிறது  சீரகம் பெரும் சீரகம் கடுகை சேர்த் சாப்பிட்டால் சீரண சக்தி அதிகரிக்கிறது வாய்வு தொல்லை இல்லாடமல் நின்மதியாக உறங்க முடிகிறது, இது தெரியாமல் மேலே உள்ள குழம்பை ஊற்றி முதல் சாப்பாடு சாப்பிட்தை பெருமையாக பேசுபவர்கள்

அறியாமையில்தான் பெருமிதம் கொள்கிறார்கள் உண்மையில் அடியில் உள்ள கறியும் அதை பிரட்டி எடுத்து சாப்பிடவனும்தான் அந்த வெந்தயம் சீரகம் கடுகு கறிக்கு போட்டதன் பலனையே அடைகிறார்கள் இதுதாங்க உண்மை

எமது உடல் நலனுக்காகவும் சுவைக்காகவும் சமைக்கும் போது கறிக்கு போடுகிற  வெந்தயம் பெரும் சீரகம் கடுகு கருவேப்பிலைகளை எறியாமல் சேர்த்து சாப்பிட்டு உடல் நலத்தை பேணுவதே மேல்

சில பேரு இவைகளை கறிக்குள் போடுவதே இல்லை, காரணம் காசு மிச்சம் பிடிக்க இல்லை இந்த பொருட்களை வாங்காமல் விட்டதாக இருக்கலாம்

ஆனால் நாம் சமைக்கும் போது பாவிக்கும் ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு இதை உணர்ந்து சமைத்தவர்கள் அந்த நாளையிலே நோய்கள் இன்றி நீண்ட காலம் வாழ்ந்திருந்ததும் உண்மை!

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen