படிப்பினையாகும்
கரும்பு கூட அடிவரை இனிக்காது
வாழ்க்கையும் இறுதி வரை சுவைக்காது
பசியிருக்கும் வரைதான் உணவும் ருசிக்கும்
பருக பருக பாலும் கசக்கும்
பழக பழக நட்பும் வெறுக்கும்
கை கோர்த்து நடந்த உறவும் கைகலப்பில் பிரியும்
ஒரு தட்டில் உண்ட உறவும் ஒட்டாமல் போகும்
நீ பாதி நான் பாதி என்று சொன்ன காதலும்
நீ யாரோ நான் யாரோ என்று மாறி போகும்
உடல் உரசி கண்ட காமமும் முதுமை வர காணாமல் போகும்
தென்றலாய் வீசிய காற்றே புயலாக அடிக்கும்
தூரிய சாரல் பெரு வெள்ள பெருக்காய் ஓடும்
காலங்கள் ஓட காதலும் ஓடும்
மனங்களும் குணங்களும் மாற
மனிதர் வாழ்க்கையும் ஒரு படிப்பினையாகும்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen