தனிமையிலே
காலை வடை மதியம் முட்டை குழம்பு சாதம்
இரவு பற்றிஸ் என்று நளபாக சமையலோடு
வாழ்க்கை இன்று போகுது
24 மணித்தியாலம் ஓடி ஓடி உழைத்தாலும்
கோடி பணத்தை சோர்த்தாலும்
இந்த ஒரு சாண் வயிற்றோடுதானே
மாங்கல்யம் தந்துனா ஆனது
அது தீந்தனா தீந்தனா பாடியே
திசை மாறி போனது
மூக்கணாம் கயிற்றை அறுத்துக்கொண்டு
ஒரு
மாடு குறுக்காலே போனது
அன்பு இல்லா வாழ்க்கையிலே அச்சாணி
உடைந்து வாழ்க்கை வண்டியும் தடம்
புரண்டது
வந்த பாதை தெரியாமல் போனது
போன வாழ்க்கையும் இளமையும்
திரும்பாது என்றது
கூடு விட்டு கூடு பாயும் வித்தையும்
தெரியாமலே உடைந்து போன கூண்டுக்குள்ளே
கிளி நின்றுசோக பாடல் பாடுது
சொந்தங்கள் ஏதுமின்றி
தொல்லைகளும் இல்லாமலே
தனிமையிலே இனிமைதானே காணுது
வந்த வேலை முடிந்து விட்டால்
ஒபிஸ்சும் மூடுது
கர்ம வினை தீர்ந்து விட்டால்
கடமைகளும் முடித்து விட்டால்
நீயும் நடையைதானே கட்டணும்
யாரை நம்பி நீ பிறந்தாய்
போகும் போது கூட வர
நீ வந்த பாதை வேறு
போக போற பாதையும் வேறு
சுற்றம் வேண்டாம் சொத்து வேணாம்
சுற்றி நாலு பேரும் வேணாம்
செத்த பின்னே எரிபதற்கு
மின்சாரம் போதுமே
இந்த மின்சாரம் போதுமே!
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen