ஆண்டவன் தீர்ப்பு
சுற்றி வர மாடி
கட்டி
மாடி மேலே மாடி
கட்டி
மரங்களையும்
வெட்டி முறித்து
சூரிய சந்திரனையும் மூடி மறைத்து
நாகரீக நாடாக
மேலை நாடு இங்கே
அதில்
கூண்டுக்குள்ளே கோழி போலே
நம்ம வாழ்க்கை
ஓடுது
காணி வளவு
தோட்டம்
துரவென்று
வாழ்ந்த சனம்
இங்கு ஓடி வந்து
அடைபட்டு
மனம் நொந்து
வெந்து சாகுது
குருவி கூட
கும்மாளமாய்
அங்கும் இங்கும்
பறக்குது
நம்ம சனம் தேடி
வந்த வாழ்க்கை
இங்கே தடம்
புரண்டு ஆடுது
காடு கரம்பு
சுற்றி திரிந்த
மனிதர் கூட
காடுமின்றி
மலையுமின்றி
இயந்திரமாய்
வாழுது
கொட்டும்
அருவியில் குழித்து
வாழ்ந்த சனங்கள்
கூட
இங்கே
வீட்டுக்குள்ளே
மல சலம்
கழிக்குது
பேராசை பெரும்
தரித்திரமாய்
போனதுதான் மீதியா?
போதாக் குறைக்கு
கொரோனா வந்து
வாயை மூக்கை
பொத்த சொன்னதா?
பாவம் செய்த
மனிதரெல்லாம்
சாகாமல்
நிக்கையில்
சும்ம போரவன்
வந்தவனை எல்லாம்
கொரோனா பிடித்து
கொல்லுதா?
ஆண்டவன் தீர்ப்பு
இதுதான் என்றால்
ஆடும் மனிதன்
என்ன செய்வான்
இந்த பூமி
என்னும் மேடையிலே
ஆடும் மனிதன்
என்ன செய்வான் ?
Keine Kommentare:
Kommentar veröffentlichen