அமைதி
எங்கு தேடியும்
அமைதி கிடைக்காத போது
அமைதியை நாமே
மனதில் உருவாக்க வேணும்
அதற்கு ஆசைகளை
துறவுங்கள்
ஒவ்வொரு ஆசைகளாய்
கை விடுங்கள்
நெல்லுக்கு களை
எடுபது போலே எம்மை
சுற்றி வரும்
உறவுகளுக்குள்ளும்
களை பிடுங்கி
எறியுங்கள்
நாம் போகும்
பாதையிலுள்ள நெருஞ்சி
முட்ககளை தூக்கி
தூர வீசுங்கள்
உடலுக்கு ஒய்வு
கொடுப்பது போலே
நம் சிந்தனைக்கும் ஓய்வு கொடுங்கள்
உடலில் உள்ள
அழுக்கை கழுவி விடுவது போலே
அகத்தே அழுக்கு
சேராமல்
தூய்மையான மனதை
பேணுங்கள்
காசுக்கும்
காமத்துக்கும் அலையாதீர்கள்
பொறாமை கொண்ட
உறவுகளை சேராதீர்கள்
கடவுளை
நம்புங்கள் உங்கள் கடமைகளை மட்டும் செய்யுங்கள்
ஆரோக்கியத்தை
பேணுங்கள்
அடுத்தவனது
வீட்டை பார்த்து ஏங்காதீர்கள்
கடைசியில்
எதுவும் கூட வராது
என்பதை
நினையுங்கள்
போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்தாக
இருபதை கொண்டு நிறைவாக
வாழுங்கள்
இதுவே அமைதியை
தரவல்லது!
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen