உயிர்கள் தப்பிச்சு
கோழி கொக்கரக்கோ
கொக்கரக்கோ
என்று பாடி
கும்மாளம் போடுது
சேவல் கூட கூவி
கூவி
கொண்டையை ஆட்டுது
காடு எல்லாம்
முயல்கள்
துள்ளி குதித்து
ஓடுது
ஆட்டுக்குட்டி மே
மே என
மெல்லனவே மேயுது
கொலை
தண்டனையிலிருந்து
தப்பி ய சீவன்களாய்
இவை இன்று
சுதந்திரமாய் உலாவுது
ஈஸ்ரருக்கு
வெட்டுவாங்கள்
என்ற பயமும்
போனது
கொரோனா வந்ததாலே
இந்த உயிர்கள்
தப்பிச்சு
வெட்டி வெட்டி
திண்ட மனிதன்
இன்று அடை பட்டு
கிடக்குறான்
அடை பட்டு
கிடக்கும் மனிதரை இவை
பார்த்து ஏளனமாய்
சிரிக்குது!
Keine Kommentare:
Kommentar veröffentlichen