Mittwoch, 15. April 2020


உயிர்கள் தப்பிச்சு 


கோழி கொக்கரக்கோ கொக்கரக்கோ
என்று பாடி கும்மாளம் போடுது
சேவல் கூட கூவி கூவி
கொண்டையை ஆட்டுது
காடு எல்லாம் முயல்கள்
துள்ளி குதித்து ஓடுது

ஆட்டுக்குட்டி மே மே என
மெல்லனவே மேயுது
கொலை தண்டனையிலிருந்து
தப்பி ய சீவன்களாய்
இவை இன்று சுதந்திரமாய் உலாவுது
ஈஸ்ரருக்கு வெட்டுவாங்கள்
என்ற பயமும் போனது

கொரோனா வந்ததாலே
இந்த உயிர்கள் தப்பிச்சு
வெட்டி வெட்டி திண்ட மனிதன்
இன்று அடை பட்டு கிடக்குறான்
அடை பட்டு கிடக்கும் மனிதரை  இவை
பார்த்து ஏளனமாய் சிரிக்குது!


Keine Kommentare:

Kommentar veröffentlichen