Montag, 19. August 2019


அன்பே சிவமாய்
கூட்டம் கூட்டமாய் பறவைகள் சுத்தி சுத்தி பறக்குது
தீட்டு திட்டாய் கரு மேகங்கள் திடர்களாய் சேருது
சில்லென்று காற்று வந்து மேனி சிலிர்க வைத்து செல்லுது
சொட்டு சொட்டாய் மழை துளிகள் பூமிக்கு வருகுது
மொட்டு  மலர்கள் எல்லாம் மொட்டவிழ்ந்து  விரியுது
கட்டு கட்டாய் கவிதை வந்து காற்றோடு கரையுது

காய்ந்து போன பூமி இன்று கழிப்பில்  மலரது
மழையும்  பூமி மேலே அன்பாக  பொழியுது
அன்புக்காக ஏங்கும் இதயங்களும் உலகில் வாழுது
அன்பு காட்ட உறவு இருந்தால் இதயங்களும் குளிருது
ஏங்க வைத்து மனிதர்களை கடவுளும் ஏன் படைத்தான்?
அன்பு இல்லா உலகினையே ஏன் வளர்த்தான்?

மனித உறவினிலே  காதல் இன்பம் கூடாமல்
தாய் பிள்ளை உறவினிலே பாசங்களும் இல்லாமல்
வறண்டு போன வாழ்வாக பல மானிடர் தன் வாழ்வு
எட்டு திக்கும் முட்டி மோதி பூமி தாய் அழுகுது
மானிடரின் கண்ணீர்  கலந்தே ஆறுகளும் பாயுது
அன்பே சிவமாய் என்று அவணி மாறுமோ?
அன்றே மானி னிலத்தில் விடிவு தோணுமே!
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen