Freitag, 6. April 2018


காக்கை கூட்டம்

காக்கை கூட்டம் கொடுத்து உண்ணுது
மனிதர் கூட்டம் பறித்து தின்னுது
நாலு கால் மிருகங்கள் சேர்ந்து போகுது
இரண்டு கால் மனிதர்கள் அடிபட்டு
பிரிந்து போகுது

ஆண்டவன் படைப்பில் வேறுபாடு
கண்ணுக்கு நல்லாய் தெரியுது
ஜந்தறிவு மிருகங்கள் அன்போடு வாழுது
ஏன் ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டும்
ஆளையாள் அடித்து கடித்து குதற பார்குது

பறவைகள் கூட்டம் பாடி பறக்குது
இந்த மண்ணில் மனிதர்கள் மட்டும்
மண்ணுக்காக  பொன்னுக்காக பெண்ணுக்கா
ஏன் அடிபட்டு மாழுது

வானத்துக்கும்  பூமிக்கும் நடுவே ஒரு
அழகான  பூந்தோட்டம்
அதில் ஆயிரம் ஆயிரம் யுத்தங்கள் வந்து
பாலை வனமாய் மாறியதே!
அதில் வாழும் மனிதர்கள்  மனங்களும்
கற் பாறைகளாய் போனதே!
கவி மீனா



Keine Kommentare:

Kommentar veröffentlichen