Sonntag, 24. Dezember 2017

உண்மை முகத்தை 

நாம யாரையும் திருத்த முடியாது
நாமாக விலகி செலவதே மேல்
ஏனெனில் குற்றம் செய்பவன்
தெரிந்தே செய்கிறான்
நாம் அதை தடுத்தால் அவன்
 நமகு எதிரியாகிறான்

தகாத ஆசைகளில் அலைபவனை
சுட்டி காட்டினால்
சுட்டி காட்டிய விரலை எமக்கு
எதிராக திருப்புகிறான்
நாடகமாடுபவன் ஒவ்வொருத்தருக்கும்
ஒரு முகத்தை காட்டுவான்
இதில் நாம் கண்ட முகம்
யாருக்கும் தெரியாது

 ஒருவனின் உண்மை முகத்தை
காண்பதே அரிது
ஒவ் வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஆசை
அதை தீர்க அவன் பாடு படுகிறான்
காமம் காசும் என வெறி பிடித்து அலைபவனுக்கு
நேர்மை நியாயம் உண்மை பற்றி
நாம சொல்வது வேப்பம் காயாக கசக்கும்
நமக்கு ஏன் இந்த வீண் வம்பு?

அவனவன் விதைத்ததை அவனே அறுப்பான்
ஆடும் மட்டும் ஆடி விட்டு அவனே
குழிக்குள் அடங்குவான்
இதுதான் அவன் தலை விதி

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen