Samstag, 7. November 2015

டை
 
ஆனைபந்தியில் ஒரு  தேனீர் கடை
அதிலிருக்கும் என்றும் சுவையான வடை
ஆரோக்கியத்து க்கு வேணும் நடை
மழை வந்தால் தேவை குடை
இன்று யார் தலையை பார்த்தாலும் டை
ஆண்களின் கண்கள் தேடுவதோ இடை
பெண்களுக்கு அழகு தருவது அழகிய தொடை
மதிப்பை தரும் அடக்கமான உடை
 
ஓடி பாயும் வெள்ளம் திறந்தால் மடை
வந்து பிடிக்கும் தீராத நோய் கூடினால் எடை
ஐந்து தானியம் அரைத்து செய்தால் அடை
ஊழியம் இல்லாது போனால் வரும் முடை
வாழ்க்கை பாதையில் வந்து விழும் தடை
அதை தூக்கி போட முடிந்தால்
தெரியும் விதியின் கேள்விக்கு விடை
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen