Sonntag, 21. Juni 2015


உன் ஞாபகமே
 

காதல் செய்ய நான் பிறந்தேன்

ஆனால் காதல் என்னை காதலிக்கவில்லை

காதல் என்னை நெருங்கவில்லை

நெருங்கிய காதல் நிலைக்கவில்லை

இசையோடு சேர்ந்த இனிய குரல் போலே

என் மனதோடு நிறைந்த உன் நினைவு

மலரோடு இணைந்த மணம் போலே

என் கருத்தில் கலந்த உன் காதல்

கரைந்து குளைந்து பொங்கலில் சுவைக்கும்

சக்கரைபோல்

நினைவில் நிறைந்து இனிக்கும் உன் குரல்

நீ மறைந்து கருகி சருகாய் போனாலும்

என் உயிரில் புதைந்து தளிர்த்து பசுமையாய்

நிக்கும் என்றும் உன் ஞாபகமே

கவி மீனா

2 Kommentare: